வி.எல்.பி. கல்லூரியில் புகைப்படக் கலை நிகழ்வு

கோவை, வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில், காட்சி ஊடகத் தொடர்புத் துறை சார்பாக 184 ஆம் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக் கலை நிகழ்வுகளை வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி துவக்கி வைத்து, புகைப்படக் கலையின் வேலை குறித்தும் அதில் தேர்ச்சி பெறுவதற்கு தகுதியும் திறமையும் தேவை என்று கூறினார்.  அதனை விளம்பரப்படுத்தவும் ஊக்குவிக்கவும் பல போட்டிகள் நிகழ்த்தப்பட்டன.

இதில் தொழில் முறை புகைப்பட கலைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. கைபேசி புகைப்படம் எடுத்தல், பேஷன் புகைப்படம் எடுத்தல் மற்றும் போட்டோ பூத் போன்ற நிகழ்வுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

மேலும், கல்லூரி துணை முதல்வர் வாசுதேவன் மாணவர்களை பாராட்டி, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.