சூலூர் விமானப்படை நிலைய தலைமை அதிகாரியாக ஏர் கொமடோர் விவர்த் சிங்

சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பை ஏர் கொமடோர் விவர்த் சிங் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜூன் 1995 இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட இந்த விமான அதிகாரி ஒரு விமானிகள் பயிற்றுவிப்பாளரும், சோதனை விமானியும் ஆவார்.இவருக்கு போர் விமானங்கள், போக்குவரத்து மற்றும் பயிற்சி விமானங்களின் பல வகைகளை இயக்கிய அனுபவம் உண்டு. இந்திய விமானப்படையின் முதன்மையான ஒரு போர் படைப் பிரிவின் தலைவராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு.

மேலும் இவர் டெல்லி விமான தலைமையகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். சோதனை விமானியாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் (Tejas) விமானத் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார்.