கோவையில், கிரிக்கெட் பந்து பட்டதில் தகராறு இளம்பெண்ணை மிரட்டிய 2 வாலிபர் கைது

கோவை, புலியகுளம் – அம்மன்குளம் பழைய ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம்ம் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு துணி துவைத்து கொண்டிருந்த பெண் மீது பந்து பட்டது.

இதனை அந்த பெண் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வித்யா(23) என்ற இளம்பெண் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதேபகுதியை சேர்ந்த அன்புசெல்வன்(25), அஜித்(26) ஆகியோர் சேர்ந்து வித்யாவை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து வித்யா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பு செல்வன், அஜித்தை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.