பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் மற்றும் அதன் துறை சார்ந்த மாணவ- மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஜுலை 1ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவை பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினார். அதனைத் தொடர்ந்து, தலைமை விருந்தினராக மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரத் போர்ஜ் நிறுவன முதன்மை தகவல் அலுவலர் யோகேஷ் ஜோபே கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில், மாணவர்களுடன் தொழில் சார்ந்த பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கல்லூரியின் முதல்வர் ஆர். பிரகாசன், இயந்திரவியல் துறைத் தலைவர் பி.ஆர்.தைலா மற்றும் அனைத்து இயந்திரவியல் துறைத் சார்ந்த துறைகளின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக 745 மாணவ-மாணவியர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் மற்றும் ஒவ்வொரு துறையிலும் முதன்மை மதிப்பெண் வாங்கியோருக்கு தங்கப்பதக்கங்களும்  வழங்கப்பட்டன.