பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களின் மிகப்பெரிய மாநாடு

தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில்,  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பார்க் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய  இந்தியாவின் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் என்ற தலைப்பில் மிகப்பெரிய மாநாடு கோவையில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவிக்கும், இம்மாநாடு நடத்த உதவியவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது