ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 15ஆம் ஆண்டு கண்ணதாசன் விழா 

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கோவை கண்ணதாசன் கழகம் இணைந்து 15ஆம் ஆண்டு கண்ணதாசன் விழா கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு ‘கண்ணதாசன் விருதும்’, டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ்.செல்வகுமார் ஆகியோருக்கு ‘அமரர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு நினைவு விருதும்’, தமிழருவி மணியன் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் ரமணன், மரபின் மைந்தன் முத்தையா, ராஜகோபாலன் மற்றும் தேவ ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.