கோவையில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் தற்கொலை

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ்(வயது31). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார். திருமணமாகவில்லை. ஆரோக்கிய தாசுக்கு அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஆரோக்கியதாஸ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியைடந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ஆரோக்கியதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.