சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை, சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சனிக்கிழமை அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் சவிதா, ஃபார்மான் அலி ஆகியோர் உள்ளனர்.