ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்! – மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இராமலிங்கம் காலனி – மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கற்பித்தல் திறமை, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், கற்றலுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியது போன்ற பணிகளை ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3 பேருக்கு மாநகராட்சி ஆணையாளர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.