நெசவு தொழில் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பெரிய நெகமம் ஊராட்சியில் நெசவு தொழில் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நெசவாளர்களின் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனுப்பர்பாளையம் ஊராட்சி, சந்திராபுரம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை, கட்டிடங்களை அமைக்கும் பணிகளையும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.