ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவி திவ்யா, நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி நான்கு பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் முஸ்பிரா 592 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜனனி, ரூபினி, வெண்ணிலா ஏஞ்சல் ஆகிய மூன்று மாணவிகள் 584 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.
மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 18 மாணவர்களை 100 மதிப்பெண்கள் பெற செய்த பள்ளியின் கணினி ஆசிரியர் தினேஷ் ஆகியோரை எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணஸ்வாமி இனிப்புகள் வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் மற்றும் பள்ளி முதல்வர் சாரதா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.