அக்சயா கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அக்சயா மேலாண்மையியல் கல்லூரியில் அன்னையர் தினம் மற்றும் உலக குடும்பதினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு எழுத்தாளரும், கவிஞருமான பாண்டிச்செல்வி கருப்பசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் மாணவர்களிடம், அன்னையர்களின் அர்ப்பணிப்பு மற்றும் குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றி விவரித்ததோடு ஒவ்வொரு மாணவரின் கருத்துக்களை பகிரச் செய்து வித்தியாசமான நிகழ்வை நடத்தினார். நிகழ்வின் முன்னதாக கல்லூரி முதல்வர் பிருந்தா நடராஜன் வரவேற்புரை வழங்கினார். துறைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.