கே.எம்.சி.எச் சார்பில் உலக காச நோய் தின பேரணி

கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவ கல்லூரி இணைந்து வாகராயம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக காச நோய் தின பேரணியை நடத்தியது. இந்த பேரணியை தலைவர் மோப்பிரிபாளையம் பேரூராட்சி சசிகுமார், கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி, கே.எம்.சி.எச் மருத்துவ கல்லூரி டாக்டர் சீதாராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், வாகராயம்பாளையம் வட்டார சுகாதார அலுவலர் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு கண்காட்சி, வில்லுப்பாட்டு மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கே.எம்.சி.எச் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.