இ.பி.எஸ் தலைமையில் மார்ச் 9 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மார்ச் 9-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் நடைபெறுகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிப்பார் எனவும் மற்ற மூத்த நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் மாவட்ட கூட்டத்திற்கான அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தவறாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தபடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.