வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இருந்து கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, வீடு அற்ற மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு வருகிறோம். மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் 42 பெண்கள் உள்பட 54 பேர் கலந்து கொண்டனர்.