வண்ணமலர் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி துவக்கம்

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் கோ-ஆப்டெக்ஸில் வருடாவருடம் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ சலுகைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும், கோவை ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள வண்ணமலர் கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது. கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் இச்சலுகை மார்ச் 25 வரை வழங்கப்படுகிறது.

துவக்க விழாவை கோவை மத்திய கூட்டுறவு வங்கி, பொது மேலாளர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதுநிலை மண்டல மேலாளர் குமரேசன், ரகம் மற்றும் பகிர்மானம் முதுநிலை மேலாளர் நந்தகோபால், துணை மண்டல மேலாளர் அழகு சுந்தரம், விற்பனை நிலைய மேலாளர் செல்வி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.