ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், ‘சென்னை பகுதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 150 பேர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரபு வரவேற்றுப் பேசினார். அதைத்தொடர்ந்து ‘சிறப்புச் சலுகை அட்டை’ (பிரிவிலெஜ்கார்டு) வெளியிடப்பட்டு, அது முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த அட்டை மூலமாக முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கு சலுகைகள் செய்துத்தரப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சை சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க செயலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.