அக்ஷரா அகாடமி பள்ளியில் போஸ்டர் மேக்கிங் போட்டி

கோவையில் உள்ள அக்ஷரா அகாடமி பள்ளியில் “இன்கிரிடபுள் இந்தியா” என்ற தலைப்பில் போஸ்டர் மேக்கிங் போட்டி நடைபெற்றது.

இதில் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி ஷங்கர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெகன் தாமோதரசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

43 வது வருட கோவை சஹோதய பள்ளிகளுக்கிடையேயான “போஸ்டர் மேக்கிங்” போட்டியில் கோவை மற்றும் சுற்றியுள்ள இதர மாவட்டங்களிலிருந்து சுமார் 60 பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். இப்போட்டியில் கோவையில் இயங்கிவரும் ஸ்டேன்ஸ் எஸ்.பி. ஐ.ஓ.எ மற்றும் டெல்லி பப்ளிக் பள்ளியை சார்ந்த மாணவ, மாணவிகள் முதல் மூன்று பரிசினை பெற்றனர்.

அக்ஷரா அகாடமி பள்ளியின் நிறுவனர் கிரீசன், அறக்கட்டளை தலைவர்கள், பள்ளியின் முதல்வர் பிரமிளா பாலன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.