லிஸ்யு பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 50 ஆண்டுகளாக பல மாணவர்களை, சாதனையாளர்களாக உருவாக்கியுள்ள இந்த பள்ளி தற்போது 50 ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது.

பள்ளி நிர்வாகம் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தி வரும் பொன் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபரும் பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு மற்றும் காருண்யா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மன்னர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விருந்தினராக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக பள்ளியின் முதல்வர் பால் தக்கினேட் தெரிவித்தார்.

பொன்விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.