கோவை கார் குண்டு வெடிப்பு விசாரணையை என்.ஐ.ஏ.,க்கு மாற்றிட முதல்வர் பரிந்துரை

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசியப் புலனாய்வு முகமைக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில், 3 இடங்களில் புதிய காவல் நிலையங்களை அமைக்கவும், சிறப்புப் படை ஒன்றை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.