கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி பெற்ற அமிர்தா டெக்னாலஜி இனேபிளிங் சென்டர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்விற்கு அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் முதன்மையர் கிருஷ்ணஸ்ரீ அச்சுதன் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளரும் ஆலோசகருமான ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலுசாமி, அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் ஐ.கியு.ஏ.சி தலைவர் பிரசாந்த் நாயர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.