அரோமா பேக்கரியின் புதிய கிளை திறப்பு

கோவை சுந்தராபுரம் பகுதியில் அரோமா பேக்கரியின் புதிய கிளை புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்க்கு அரோமா பேக்கரியின் நிறுவன தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

அவரது மனைவி சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

மேலும், இப்புதிய கிளையில் அனைத்து வகையான க்ரீம் கேக்குகள், ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள், பால் பொருட்கள், ஐஸ்கிரீம் என அரோமா பேக்கரியின் அனைத்து வகையான ஸ்நாக்ஸ் வகைகளும் இங்கு உள்ளன.