பள்ளி மாணாக்கர்களுக்கு பேரிடர் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு

உலக பேரிடர் தினம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மழைக் காலங்கள் மற்றும் பேரிடர்களில் பாதுகாத்துக் கொள்ளும் முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய போலி ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

இதனை பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்.