நேரு விமானவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லூரியில் விமானவியல் மாணவர்களுக்கான 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வெங்கடாச்சலபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டங்களை வழங்கினார். மேலும் நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

மேலும் கல்வி நிலைய முதல்வர் பாலாஜி மற்றும் துறைத்தலைவர்கள் சிங்காரவடிவேலு, மல்லிகா பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.