ஆர்.வி. கல்லூரியில் முதியோர் தினப்பேரணி

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் அக்டோபர்-1 சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக சர்வதேச முதியோர் தினப்பேரணி நடைபெற்றது.

பேரணியில் கல்லூரி முதல்வர் ரூபா தலைமை ஏற்றார். காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர் வீரபாகு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று “பெரியோரை மதிப்போம் பெரியோரைக் காப்போம்”, “பெரியோரின் அனுபவம் நமக்கு எளிய பாடம்”, “தவிர்ப்போம் தவிர்ப்போம் முதியோர் இல்லம் தவிர்ப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷமிட்டுக் கொண்டு காரமடை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஊர்வலமாக நடந்து சென்றனர்‌.

இந்நிகழ்வு மக்கள் மத்தியில் முதியோரைக் காப்பாற்றுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.