கே.பி.ஆர் மில் நிறுவனத்தில் சிறப்பு சொற்பொழிவு

கே.பி.ஆர் மில் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், தங்களது மேற்படிப்பை பகுதி நேரமாக மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் உயர் படிப்பிற்கான பாடங்களை கற்ப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் பல்வேறு சிறப்பு சொற்பொழிவுகளையும் கே.பி.ஆர் மில் நிறுவனம் வழங்குகிறது.

அந்த வகையில் “கற்பதற்கு ஏற்ற காலம்” என்ற தலைப்பில் ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலாம்பூரில் உள்ள கே.பி.ஆர் மில் நிறுவனத்தில், கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி உயர்கல்வி பயிலும் பெண் பணியாளர்களிடம் “கல்வியும் மனித மாண்பும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு கே.பி.ஆர் பெண் பணியாளர்கள் கல்வி பிரிவின் முதல்வர் மற்றும் நீலாம்பூர் வளாகத்தின் மனிதவள பிரிவு மேலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.