ஆர்.வி கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது.

இவ்விழாவை கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயிலும் மாணவி ரிஸ்னா திருவோணம் திருவிழா பிறந்த வரலாறு குறித்து உரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து வணிகவியல் துறை, கணினி அறிவியல் துறை, உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைப் பேராசிரியர்கள், கல்லூரியின் நிர்வாக மேலாளர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.