ஹரிபவனம் ஹோட்டலின் 9 வது கிளை திறப்பு

கோவை அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை எதிரில் ஹரிபவனம் ஹோட்டலின் 9 வது கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதிய கிளையை ஹரிபவனம் ஹோட்டல்ஸ் நிறுவனர் மறைந்த ராஜூ அவர்களின் மனைவியும், உரிமையாளர் பாலசந்தர் ராஜூவின் தாயாருமான ருக்மணி ராஜூ திறந்து வைத்தார்.

நிறுவனத்தின் 50 வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டுள்ள கிளையில், பூமராங் பிரத்யேக ஐஸ்கீரிம் பார்லரை ஹரிபவனம் உரிமையாளர் பாலசந்தர் ராஜூவும், பிரைவேட் டைனிங் & ஹால் அறையை பொன்மணி இண்டஸ்ட்ரீஸ் குமரேசன், லில்லி பொக்கே ஷாப்-ஐ மணி ரங்கசாமி, ஷி ப்ரூஸ் கபே-வை கமல், ஆர்.ஆர் டீ கார்னரை பாரதி கணேசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கிளையின் சிறப்பம்சங்கள் பற்றி நிர்வாகிகள் கூறுகையில்: முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எங்களது 9 வது கிளையான இங்கு, உணவு அரங்கமானது 160 நபர்கள் வரை உணவு அருந்தும் வசதியுடன் அமைந்துள்ளது. அசைவ மற்றும் சைவ உணவு வகைகள், மீட்டிங் ஹால், ரூஃப் டாப் கபே. ஐஸ்கீரிம் பார்லர், பொக்கே ஷாப் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளது. மேலும் இங்கு மிகப்பெரிய அளவிலான கார் பார்க்கிங் வசதியும் உள்ளது என்றனர்.