ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை தவிர்க்க கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஹைதராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07120), வரும் 10-ந் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் – கேரள மாநிலம் கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (06501), யஷ்வந்த்பூரில் இருந்து நாளை (7-ந் தேதி) பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

நாளை கொல்லம் – யஷ்வந்த்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06502), கொல்லத்தில் இருந்து வரும் 8-ந் தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். இந்த ரயில்கள், கோவை, திருப்பூர். ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06053), சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (7-ந் தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (06054), எர்ணாகுளத்தில் இருந்து வரும் 9-ந் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நெல்லை -பெங்களூர் கன்டோன்மென்ட் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06052), நெல்லையில் இருந்து வரும் 10-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.