ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் மருதமலை கோயிலில் சிறப்பு பூஜை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி சார்பாக, ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோவில் நிர்வாகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஐ.என்.டி.யூ.சி பொதுச் செயலாளர் கோவை செல்வன், முன்னாள் கவுன்சிலர் சோபனா செல்வன் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பார்த்திபன், வடவள்ளி பாலு, ஜெரி லூயிஸ், ராகவன், நித்யானந்தன், ஜோதி முத்துக்குமார், ராம்குமார், முகவை வெள்ளைச்சாமி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.