இந்தியாவில் ‘டகோ பெல்’ 100 வது உணவகம் திறப்பு: சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

மெக்சிகன் உணவகமான டகோ பெல் இந்தியாவில் தனது 100 வது உணவகம் திறப்பதை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. அமெரிக்காவிற்கு வெளியே அதிக அளவு உணவகங்களை டகோ பெல் இந்தியாவில் திறந்திருக்கிறது.

100 வது உணவகம் திறப்பை கொண்டாடும் விதமாக 31 ஆகஸ்ட் முதல் 2 செப்டம்பர் வரை 3 நாட்கள் சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு டகோ பெல் வழங்குகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் இந்த சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் 100 ரூபாய்க்கு அவர்கள் விரும்பும் டகோஸ், பர்ரிடோஸ், சலுபாஸ், நாச்சோஸ் மற்றும் எ லா கார்டே மெனு மற்றும் சிறப்பு மெனு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

இந்த சலுகைகள் நேரடியாக உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், ‘டகோ பெல்’ செயலி மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இது குறித்து டகோ பெல் ஏபிஏசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அங்குஷ் துலி கூறுகையில், இந்தியாவில் 100 வது டகோ பெல் திறப்பு விழாவை எங்கள் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் தனித்துவமான டகோ பெல் அனுபவத்தை நாடு முழுவதும் உள்ள அதிகமான உணவு பிரியர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறோம். வாடிக்கையாளர்களின் வரவேற்பைத் தொடர்ந்து இந்தியாவில் 600 உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

டகோ பெல் பங்குதாரரும், பர்மன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் இயக்குனருமான கவுரவ் பர்மன் கூறுகையில், 100 வது உணவகத்தை திறப்பதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், டகோ பெல்லில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.

ஒவ்வொரு 80 மணி நேரத்திற்கும் ஒரு உணவகத்தை இந்தியாவில் திறக்க நாங்கள் கடுமையாக பணியாற்றி வருகிறோம். இதன் மூலம் விரைவில் 600 உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.