காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் நுரையீரல் பிரச்சனைகள்

– விழிப்புணர்வு அவசியம் என மருத்துவர் விளக்கம்

கோவை மாவட்டம் இயற்கையாகவே மற்ற மாவட்டங்களை விட வெப்பம் குறைவாக இருக்கும் மாவட்டம், கோவையின் இயற்கை சூழல் அவ்வாறாக அமைந்தள்ளது. அதேபோல் கோவையில் ஆஸ்துமா, அலர்ஜி (ஒவ்வாமை) போன்ற நோய்களும் கொஞ்சம் அதிகமாகவோ உள்ளது.

தற்போது காலநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் நுரையீரல் பிரச்சனை இருமல், சளி, காய்ச்சல் என தொடர் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றை கவனமாக கையாள வேண்டும். நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்தவர் ஆலோசனை எடுத்துக்கொண்டால் நல்லது. சுய விருப்ப மருந்துகள் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தாமல் அதிகரிக்க செய்து விடுகிறது.

நுரையீரல் சிறப்பு மருத்துவர் கௌதமன் நுரையீரல் பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவ ஆலோசனையாக கூறியிருப்பதாவது:

இயற்கையாகவோ நமது மூச்சுக்குழாய் குளிரான காற்றுக்கு சிறிதளவு சுருங்கக் கூடிய தன்மை கொண்டது. ஏற்கனவே ஆஸ்துமா அல்லது COPD என்ற மூச்சுக்குழாய் நோய்கொண்டவர்களுக்கு இந்த குளிரான காற்றை சுவாசிக்கும் பொழுது அவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் தீவரமடையும். அதனால் தான் மழை மற்றும் குளிர் காலங்களில் மருத்துவமனையை அணுகுவது அதிகம் ஆகின்றன.

அதுமட்டுமல்லாமல் குளிர் காற்று, மழை காலங்களில் வைரஸ் கிருமிகள் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. இந்த குளிரான வெப்ப சூழல் வைரஸ் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்றதாகும். வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் இருமல், சளி பிடிக்க அதுவும் முக்கிய காரணம். இந்த சளி, இருமல் பெரும்பாலும் தானாக சரியாகிவிடும். ஆனால் ஒரு சிலருக்கு அது நிமோனியா என்னும் நுரையீரல் தொற்று வரை தீவிரமடையலாம். அதனால் மூன்று நாட்களுக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானதாகும்.

மழைகாலங்களில் சிலர் பெரும்பாலும் வீட்டிலே இருக்க நேரிடும் அப்பொழுது வீட்டிலுள்ள ஒரு சில தூசிகள் அதாவது நாய், பூனை, பொடுகு மற்றும் சில தூசிகள் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடும். அதனால் தும்மல், மூக்கில் சளி, இருமள், கண் எரிச்சல், தோல் ரீதியான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

என்ன செய்யலாம்:

குளிர் காலங்களில் இவ்வாறாக சளி, இருமல் வரும் பொழுது, கொதிக்க வைத்த தண்ணீரை பருகுவது நல்லதாகும். மேலும் மித கொதித்த தண்ணீரில் உப்பு சேர்த்து கொப்பளித்தல் வைரஸ் கிருமிகளின் பெருக்கத்தை குறைக்கும்.

மழைக்காலங்களில் வீட்டிலே இருக்க கூடியவர்கள் முகக் கவசம் அணிந்து இருந்தால் தூசி ஒவ்வாமையை தவிர்க்க முடியும்.

சளி, இருமல் மூன்று நாட்களுக்கு மேல் இருப்பின் அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானதாகும். தாமாக மருந்தகத்தில் மருந்து வாங்கி உட்கொள்வது பாதுகாப்பற்றது. அதனால் மோசமான பின்விளைவுகள் வரக்கூட நேரிடும்.

வாரந்தோறும் இலவச ஆலோசனை

கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக நுரையீரல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமை யும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளதாகவும் டாக்டர்.கௌதமன் தெரிவித்தார்.

மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர்: நுரையீரல் சிறப்பு மையம், ரத்னா வளாகம் 47 கௌலிபுரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவ மையத்தில் நுரையீரல் செயல்திறன் பரிசோதனை, ஆஸ்மா, அலர்ஜி, காசநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆகியவற்றிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குரட்டை பிரச்சனைக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு: டாக்டர்.கௌதமன், 8870950576