கே.ஐ.டி கல்லூரி மாணவர் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு தேர்வு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் (கே.ஐ.டி) கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறை மாணவர் சக்திவேல் புரோ கபடி சீசன் 9 வது போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு பன்னிரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு தேர்வாகி உள்ளார்.

இந்த சாதனையை கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள், விளையாட்டு துறை இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.