மழையால் பாதித்தவர்கள் பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றி கொள்ளலாம்

கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பலரும் தங்களது உடமைகளை இழந்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து திறந்து விடப்பட்டது. இதனையடுத்து ஏராளமான நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.