குளங்களில் டீசல் படகு செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் – மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மனு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் என கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்வள உதவி இயக்குநர் ஒதுக்கித் அவரின் பரிந்துரையின் பெயரில் 2019-2023 வரை 11 குளங்களை தந்துள்ளீர்கள். நாங்கள் மீன் குஞ்சு இருப்பு செய்து மீன்பிடித்து வருகிறோம்.

இந்த குளங்களை நம்பி 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் டீசல் படகுகள் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாங்கள் பெடல் படகுகள் விடுவதாக எண்ணினோம். தற்போது, டீசல் படகுகள் விடுவதால் குளத்தில் உள்ள மீன்களில் டீசல் மற்றும் பெட்ரோல் வாசம் வரும். இதனால் குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்கவும் என குறிப்பிட்டிருந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தில் உள்ள ஏரியில் டீசல் படகுகள் பயன்படுத்தியதால் தான் மீன்கள், டீசல் வாசத்தினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.