மின் கட்டணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜூனன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், சொத்துவரி உயர்வுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்க்காடு சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் பேசிய போது, அதிமுக, பி.ஜே.பியிடம் மண்டியிட்டோம் என பேசுகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்த சொன்னார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் ஏற்றவில்லை.

செந்தில் பாலாஜியை வளர்த்து விட்டது அதிமுகதான் எனவும் மனிதனாக செந்தில் பாலாஜியை கொண்டு வந்தால், திமுகவிற்கு போய் மிருகமாயிட்டார். திமுகவினருக்கு நிர்வாக திறமை இல்லை எனவும் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. எடப்பாடியிடம் கேளுங்கள் எனவும் தெரிவித்தார்.

திமுக அமைச்சர்கள் 32 பேரும் எப்படி வசூலிக்கலாம் என ரூம் போட்டு யோசிக்கின்றனர். விரைவில் திமுக அரசு பஸ் கட்டணத்தை ஏற்றபோகின்றது. போக்குவரத்தை தனியார் மயமாக்க போகின்றோம் என சொல்ல போகின்றனர். அதிமுக ஆட்சியில் 50 தடவை மத்திய அரசு கடிதம் எழுதியும் தைரியமா கட்டணத்தை ஏற்றவில்லை எனவும்  தெரிவித்தார்.