தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கட்டாயம் – பள்ளி கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டு கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை உத்தரவில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

பொது பிரிவினருக்கு 31 %, எஸ்.டி பிரிவினருக்கு 1 %, எஸ்.சி பிரிவினருக்கு 18 %, எஸ்சிஏ இருப்பின் அவர்களுக்கு 3 % இட ஒதுக்கீடும், எம்.பி.சி பிரிவினருக்கு 20 %, பி.சி. எம் பிரிவினருக்கு 3.5 %, பி.சி பிரிவினருக்கு 26.5 % என்ற அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, முதலில் பொதுப்பிரிவினருக்கான 31 % இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 31 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.