மலைப்பகுதிக்கு சென்று  மருத்துவ பெட்டகத்தை வழங்கிய மா. சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, ராசிபுரம் அருகே போதைமலை பகுதிக்குட்பட்ட மலை கிராமங்களில் நடைபெற்றது.

இதில், 75வது லட்சம் பயனாளிக்கான மருந்து பெட்டகத்தை கெடமலை கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் என்ற பயனாளிக்கு சுகராதர துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

முன்னதாக, அந்தப் பகுதியில் போதிய சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், இந்த மருத்துவ பெட்டகத்தை வழங்குவதற்காக 4 கிலோ மீட்டர் தூரத்தில் செங்குத்தான மலைப்பகுதியில் நடந்து சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனாளிக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்.

கரடுமுரடான மலைப்பகுதியிலும், செங்குத்தான பாதைகளிலும் நடந்து சென்று விடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.