200 புதிய விமானங்கள் வாங்க ஏர் இந்தியா திட்டம்

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 200 விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விமானத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அரசு வசம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கி கடந்த ஜனவரி மாதம் முதல் இயக்கி வருகிறது.

விமான சேவையை சீரமைக்கும் வகையில் 200 புதிய விமானங்களை வாங்க டாடா திட்டமிட்டுள்ளது. இதற்காக போயிங், ஏர் பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் 70 சதவீதம் சிறிய விமானங்களாக இருக்கும். ஏர் இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளாக புதிதாக ஒரு விமானம் கூட வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.