பழனியாண்டவர் கோயிலில் ஆண்டு விழா

கோவை கணபதி சி.எம் கல்யாண மண்டபம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர், விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழா கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையிலும், செல்வம் ஏஜென்சிஸ் உரிமையாளர் நந்தகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

வேள்வி வழிபாடு, அபிஷேக பூஜை, திருக்குட நீராட்டு மற்றும் அலங்கார பூஜை ஆகியவை ஸ்ரீ பழனி ஆண்டவருக்கு செய்யப்பட்டது. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆண்டு விழாவிற்க்கான ஏற்பாடுகளை ரவி தலைமையிலான குழுவினர், பரமசிவம் மற்றும் ருக்குமணி குடும்பத்தார் செய்திருந்தனர்.