கே.பி.ஆர் கல்லூரியில் மேலாண்மை குறித்த கலந்துரையாடல்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கேரியர் டெவலப்மெண்ட் சென்டர் சார்பில் மேலாண்மையுடன் சிறந்து விளங்கும் மையம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு Virtusa நிறுவனத் தலைவர்கள் கிருதிவாசன், தலைவர் – வியூக ஈடுபாடு மற்றும் கூட்டாண்மை, வெங்கடநாராயணன், சீனியர், வி.பி – டெக்னாலஜி, கமருதீன் கோட்டூர் அப்துல் ரசாக், இயக்குனர் – டெலிவரி, மற்றும் தினேஷ் வாரியர் சீனியர் ஆர்க்கிடெக்ட் – டெக்னாலஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஆலோசகர் ராமச்சந்திரன், தொழில் மேம்பாட்டு மைய இயக்குனர் தாமரை கண்ணன் மற்றும் முதன்மையர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பாடத்திட்டம், விருதுகள், சாதனைகள், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், மாணவர் பலம், மாணவர்களின் சாராத மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். பின்னர், வெங்கடநாராயணன் மற்றும் குழுவினர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினர்.