ஷர்மிளா சந்திரசேகர் மாமன்ற உறுப்பினராக பதவியேற்பு

கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா 100 வார்டுகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

கோவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். இதில், அதிமுக சார்பில் 38 வது வார்டில் போட்டியிட்ட ஷர்மிளா சந்திரசேகர் மாமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.