கோவையில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு தொடங்கியது

நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 100 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில், 96 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. மூன்று வார்டுகளில் அதிமுக.,வும் ஒரு வார்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் வெற்றி பெற்றன.

இதனிடையே வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா புதிய மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

வார்டு 1ல் இருந்து வரிசையாக நூறு வார்டுகளுக்குமான உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.