தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி

மும்பையில் நடைபெற்ற தேசிய இளையோர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் – 2021 போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் சென்டரில் பயிலும் மாணவர்கள் 1 தங்கப் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 700 குதிரை வீரர்கள் பங்கேற்றனர். இதில், குழந்தைகள் – II அணி பிரிவில் ஆதவ் கந்தசாமி, ஹன்சிகா ஸ்ரீனிவாசன் மற்றும் ஹர்ஷித் வெள்ளி பதக்கமும், குழந்தைகள் – II திரட்டி பிரிவில் ஆதவ் கந்தசாமி, தங்க பதக்கமும், ஹன்சிகா ஸ்ரீனிவாசன் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். குழந்தைகள் – I அணி பிரிவில் சஹானா கோகுல் 5வது இடம் பிடித்துள்ளார்.

அலெக்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் சென்டரின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி, பிசினஸ் ஹெட் மற்றும் முதன்மை பயிற்சியாளருமான சரவணன் மாணவர்களின் தேசிய அளவிலான சாதனையை பாராட்டி கௌரவித்தனர்.