குன்னூரில் இருந்து பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்து

குன்னூரில் இருந்து வரும் ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பாதுகாப்பாக வந்த தமிழக போலீசாரின் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல் கோவை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக தமிழக போலீஸாரின் வாகனம் குன்னூரில் இருந்து பாதுகாப்புக்காக உடன் வந்தது.

அப்போது போலீசாரின் வாகனம் மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் காவலர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.