மருத்துவ உபகரணங்களை வழங்கிய லக்ஷ்மி பிரைவேட் லிமிடெட்

லக்ஷ்மி பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்ரீகாரா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து சுமார் ரூ. 2.50 லட்சம் இணை மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கோவை மாவட்டம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா அவர்களிடம், எல்.ஆர்.டி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஷாந்த குமார் பட்நாயக் வழங்கினார்.

மேலும் இதுகுறித்து டாக்டர் அருணா கூறுகையில்: வழங்கப்பட்ட இம்மருத்துவ உபகரணங்கள் வாகரையம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ள வகையில் இருக்குமென தெரிவித்தார்.

மேலும் சுஷாந்த குமார் பட்நாயக் கூறுகையில்: ஆண்டுதோறும் எல்.ஆர்.டி குழுமம் மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் கடந்த கொரோனா தொற்று காலத்தில் சூலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் முகாமிற்கு கணியூர் ஊராட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

மேலும் இதே போல் கடந்த ஆண்டு முத்து கவுண்டன்புதூர் ஊராட்சியில்பொது மக்களுக்கு பயன்படும் வகையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. அதேபோல் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளின் மூலம் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உணவுப்பொருட்களும், உதகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுமார் 550 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

வாகராயம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ காரா இன்ஜினியரிங் வளாகத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதன்மூலம் இந்நிறுவன ஊழியர்களும் அருகிலுள்ள கிராம பொதுமக்களும் பயனடைந்தனர்.