மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கம் நடத்திய கொரோனா விழிப்புணர்வு

கோவையில் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கத்தின் கோவை கிளை சார்பாக நடைபெற்ற இலவச முகக்கவசம் வழங்குதல் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கத்தின் கோவை கிளை தலைவர் இம்ரான், துணை தலைவர், ஹர்பிரீத் சிங் ஆனந்த் எனும் டோனி சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட, சமுதாயத்தில் தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் மேம்பாட்டு தலைவர் ஜைனப், மாவட்ட விஜிலன்ஸ் செயலாளர் கார்த்திக் மற்றும் சமூக மேம்பாட்டு செயலாளர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.