அசைவ உணவு சாப்பிட்ட பிறகு என்ன செய்ய கூடாது ?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவுதான் நினைவுக்கு வரும். வாரம் ஒரு நாள் அசைவ உணவு இல்லை என்றால் அந்த வாரம் முழுமையடையாது. அசைவ உணவு சாப்பிட பிறகு சிலருக்கு சோடா பானங்கள் குடிக்க தோன்றும் சிலருக்கு இனிப்பு அல்லது டீ, காபி குடிக்க தோன்றும்.

உணவு முடித்த பின் செரிப்பதற்காக சோடா போன்றவற்றை குடிக்க வேண்டுமென்று நினைத்து பலரும், பல வகையான பானங்களை அவரவர் விருப்பத்திற்கு எடுத்து கொண்டு இருப்பீர்கள். இதை எடுத்து கொள்வதால், ஏற்கனவே சாப்பிட்ட எண்ணெய் பதார்த்தங்கள் செரிப்பதற்கு செரிமான மண்டலம் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். இப்போது குளிர்ச்சியாக எடுத்து கொள்ளும் போது செரிமான பிரச்சனை வரும். உணவு முழுமையாக செரிமானம் ஆவதற்கு கல்லீரல், கணையம், இரைப்பை என அனைத்தும் ஒரு விதமான அழுத்தத்தை செலுத்தும். அதனால் அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு, சோடா போன்ற குளிர்ச்சி பானங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும், சிலருக்கு குளிர்ச்சியாக ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என தோன்றும். இது மிகவும் தவறான உணவு பழக்கம். பொதுவாக உணவை எடுத்து கொண்ட பிறகு, செரிமான உறுப்புக்கள் அமிலங்களை சுரக்கும். இது செரிமானத்தை துரிதப்படுத்தும். இந்த நேரத்தில் குளிச்சியாக எடுத்து கொள்வது, செரிமானத்தை தாமதப்படுத்தும்.

அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு ஒரு 30 நிமிடங்கள் கழித்து 1கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை மெதுவாக குடிப்பது, செரிமானத்தை துரிதப்படுத்தும். செரிமான அமிலங்கள் சரியாக வேலை செய்ய உதவும். மேலும், இது கழிவுகளை வெளியேற்ற உதவும். அதிகமாக சாப்பிட பின் செரிமான வேலை முடிந்து, ஊட்டச்சத்துகள் உடலில் இரத்தத்தில் கலந்து, கழிவுகளை வெளியேற்ற இது உதவும். உடல் லேசாக இருப்பது போன்று தோன்றும்.

அதனால் அசைவ உணவு சாப்பிட பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். அல்லது வீட்டிற்குள், வீட்டிற்கு வெளியே மெதுவாக ஒரு 20 நிமிடங்கள் பொறுமையாக நடக்கலாம். இதனால் உடலில் கொழுப்புகள் சேர்வது குறையும். உணவுகள் அனைத்தும் கலோரிகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படும்.