கே.பி.ஆர் கல்லூரியில் அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி (27/07/2021) அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் K. P. ராமசாமி கலந்து கொண்டு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி முன்னிலை வகித்து மரியாதை செலுத்தினார். கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கல்லூரியின் வணிகவியல் துறை முனைவர் குமுதாதேவி கணினி அறிவியல்துறை முனைவர் சசிகலா,மேலாண்மைத்துறை முனைவர் சியாம்சுந்தர், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முத்துக்குமாரவடிவேல் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தமிழ்த்துறை பைந்தமிழ் உயராய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு மலர் தூவி வணங்கியதோடு கலாம் அவர்கள் கண்ட, எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி குறித்தான சிந்தனையை மனதில் ஏற்றிக்கொண்டு மரியாதை செலுத்தினர்.