“கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார்”

கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப் -2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கே.ஜி.எப். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கே.ஜி.எப்-2 படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படம் வருகிற ஜூலை-16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டருடன் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுஅதில் ‘திரையரங்கம் முழுவதும் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார்’ என்றும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.